<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அரசியல் &#8211; V MEDIA</title>
	<atom:link href="https://vmedianews.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://vmedianews.com</link>
	<description>அனைவருக்குமான நடுநிலை ஊடகம்</description>
	<lastBuildDate>Sat, 18 Dec 2021 09:27:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.8.1</generator>

<image>
	<url>https://vmedianews.com/wp-content/uploads/2021/10/123-32x32.png</url>
	<title>அரசியல் &#8211; V MEDIA</title>
	<link>https://vmedianews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழருக்கு தீர்வு கிடைக்கும்வரை அரசியலுக்கு ஓய்வில்லை &#8211; சம்பந்தன்</title>
		<link>https://vmedianews.com/archives/7118</link>
					<comments>https://vmedianews.com/archives/7118#respond</comments>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Dec 2021 09:20:24 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[Popular]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=7118</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/7118" title="தமிழருக்கு தீர்வு கிடைக்கும்வரை அரசியலுக்கு ஓய்வில்லை &#8211; சம்பந்தன்" rel="nofollow"><img width="300" height="165" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/12/sampanthan-mp-300x165.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="சம்பந்தன் இராஜினாமா - போலியான செய்தி" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/12/sampanthan-mp-300x165.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/12/sampanthan-mp.jpg 600w" sizes="(max-width: 300px) 100vw, 300px" title="சம்பந்தன் இராஜினாமா - போலியான செய்தி" /></a><p>தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது பொய்யான செய்தி எனவும் அவ்வாறான எந்த பேச்சுகளும் இடம்பெறவில்லை எனவும் விமீடியாவுக்கு இரா.சம்பந்தனின் செயலாளர் உறுதி&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/7118">தமிழருக்கு தீர்வு கிடைக்கும்வரை அரசியலுக்கு ஓய்வில்லை &#8211; சம்பந்தன்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/7118" title="தமிழருக்கு தீர்வு கிடைக்கும்வரை அரசியலுக்கு ஓய்வில்லை &#8211; சம்பந்தன்" rel="nofollow"><img width="300" height="165" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/12/sampanthan-mp-300x165.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="சம்பந்தன் இராஜினாமா - போலியான செய்தி" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/12/sampanthan-mp-300x165.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/12/sampanthan-mp.jpg 600w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="சம்பந்தன் இராஜினாமா - போலியான செய்தி" /></a>
<p>தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது பொய்யான செய்தி எனவும் அவ்வாறான எந்த பேச்சுகளும் இடம்பெறவில்லை எனவும் விமீடியாவுக்கு இரா.சம்பந்தனின் செயலாளர் உறுதி செய்திருந்தார். .</p>



<p>இந்த நிலையில் குறித்த போலி செய்தி அல்லது பிரச்சாரம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முழுமையான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p>



<p>அந்த அறிக்கையில் &#8220;தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறும் வரை தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை. ஓய்வு பெறுவதற்காகவே, வசதிகளை அனுபவிப்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் அல்ல. தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சனைக்கு முடிவுக் காணக்கூடிய அரசியல் தீர்வொன்றை காணுவதற்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை பெறாமல் அரசியலில் இருந்து விடைபெறப்போவதில்லை என அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p>சில முகநூல்களிலும்; சமூக வலைத்தளங்களிலும், ஏனையவை வதந்திகளாகவும் இரா.சம்பந்தன் பதவிவிலகப் போகின்றார் அவர் பதவி விலகி இன்னொருவருக்கு இடமளிக்கவேண்டும் என்ற செய்திகள் தொடர்ந்து வருகின்ற நிலையில் இதுபற்றி அவரிடம் நேரடியாக வினாவிய போது மேற்கண்டவாறு இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார்.</p>



<p>இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் நீண்ட நாட்களாக கோரி வந்தபோதும், அந்த கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படாது இழுத்தடிக்கப்படுகின்ற நிலையில் காலம் கடத்துகின்ற போக்குமே காணப்படுகின்ற நிலையில் தமிழ் மக்களின் எதிர்கால சுபீட்சமும், அமைதியும், சுயநிர்ணயமும் கருதி தீர்வை பெறும் வரை அரசியலில் இருந்து ஓய்வுபெறும் நோக்கம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை.<br>நான் அரசியலுக்கு வந்தததன் காரணம் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சனைக்கு, நிரந்தரமான நிட்சயமான தீர்வை பெற வேண்டும் என்பதும், கடந்த 50 வருடங்களாக நான் போராடி வந்திருக்கின்றேன். தந்தை செல்வா என்னை அரசியலுக்கு வரும்படி அழைத்தபோது நான் மூன்று முறை மறுத்தததன் பின்பே அரசியலுக்குள் வந்தேன். என்னுடைய வருகை வெறும் அரசியல் மயப்பட்டதாக அனுகூலங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக வந்த ஒரு பயணம் அல்ல.</p>



<p>நீண்டகாலமாக புரையோடிப் போயிருக்கின்ற தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு நிரந்தரமான பலமிக்க தீர்வொன்றை பெற்றுத் தரவேண்டும் என்ற கடந்த 4 தசாப்தத்துக்கும் மேலாக இலங்கை அரசாங்கத்துடன் போராடி வந்திருக்கின்றேன்.<br>அதே போன்று சர்வதேச நாடுகள், சர்வதேச தலைவர்கள் மூலமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்திருக்கின்றேன். என்னுடைய பயணம் இன்னும் முடிவுறவில்லை. எப்பொழுது தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ளுகிறோமோ அன்று நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கான ஒரு நிலை உருவாகலாம்.</p>



<p>இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் என்னுடைய பிரதேசத்து மக்களும் அமைதியாகவும், நிம்மதியாகவும் சுயநிர்ணயப் பலத்துடன் வாழவேண்டும் என்ற கனவோடுதான் நான் அரசியலுக்கு வந்தவன். எனவே, என்னுடைய இலக்கு, நோக்கம், எதிர்பார்ப்பு, இலட்சியம் என்பன நிறைவேற்றப்படும் காலத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவன் நான் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.</p>



<p>இன்றைய அரசாங்கத்தில் புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்படுவதற்கான சாதக நிலையொன்று காணப்படுவதாக கூறப்பட்டபோதும் அது பற்றி முயற்சிகளும், முன்னெடுப்புக்களும் தெளிவாக இல்லை என்பதை உலகம் நன்கு அறியும். உருவாக்கப்படவுள்ள அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் நானும் எனது கட்சியும் மிகத் தீவிரமாகவும், அக்கறையுடனும் செயற்பட்டு வருகின்றோம் என்பதை மிகத் தெளிவாக சகலருக்கும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.</p>



<p>எமது கூட்டமைப்பின் இந்திய பயணம் தொடர்பாக சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. எந்தவொரு நோக்கம் கருதியும் அந்த பயணம் இடைநிறுத்தப்படவில்லை. முன்னாயத்தமற்ற ஒரு சூழ்நிலையில் அப்பயணத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டதன் காரணமாக செல்ல முடியாது போய்விட்டது மாத்திரமின்றி சில தவிர்க்க முடியாத காரணங்களினால் கூட்டமைப்பினுடைய ஒரு சில தலைவர்கள் அப் பயணத்தில் பங்குகொள்ள வாய்ப்பில்லாத சூழ்நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டது.</p>



<p>தொடர்ந்தும் இந்திய தலைவர்களுடன் தொடர்பில் நாம் இருந்துகொண்டிருக்கின்றோம். மிக விரைவில் இந்திய அழைப்பை ஏற்று, அங்கு சென்று தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பாகவும், இன்றைய அரசாங்கத்தினுடைய போக்கு தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாட இருக்கின்றோம். எங்களுடைய இந்திய பயணம் மிகச்சிறந்தவொரு வாய்ப்பாக அமையும் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.</p>



<p>எனவே, அர்த்தமற்ற விமர்சனங்களும், வதந்திகளும் எம்முடைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களையும் கொண்டு வரப்போவதில்லை. எந்த மக்கள் என் மீது நம்பிக்கை கொண்டவர்களாக என்னை தேர்த்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்களோ அந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வீணாடிக்கும் வகையில் நான் செயற்பட போவதுமில்லை. ஓய்வு பெறப்போவதில்லை என்பதை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.</p>



<p>எனவே, நான் அரசியல் தீர்வொன்றை நோக்கி எமது பயணம் நீண்டு செல்வதாக இருந்தாலும் அந்த இலக்கை அடையும் வரை பயணித்துக் கொண்டிருப்பேன் ஓயப் போவதில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.</p>



<p>(திருகோணமலை சிறப்பு செய்தியாளர்)</p>



<p>தொடர்புடைய செய்தி</p>



<figure class="wp-block-embed is-type-wp-embed is-provider-v-media wp-block-embed-v-media"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="wp-embedded-content" data-secret="CdhFppDdtR"><a href="https://vmedianews.com/archives/7100">சம்பந்தன் இராஜினாமா &#8211; போலியான செய்தி</a></blockquote><iframe class="wp-embedded-content" sandbox="allow-scripts" security="restricted"  title="&#8220;சம்பந்தன் இராஜினாமா &#8211; போலியான செய்தி&#8221; &#8212; V MEDIA" src="https://vmedianews.com/archives/7100/embed#?secret=CdhFppDdtR" data-secret="CdhFppDdtR" width="600" height="338" frameborder="0" marginwidth="0" marginheight="0" scrolling="no"></iframe>
</div></figure>



<figure class="wp-block-image size-full"><img fetchpriority="high" decoding="async" width="600" height="330" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/12/sampanthan-mp.jpg" alt="தமிழருக்கு தீர்வு கிடைக்கும்வரை அரசியலுக்கு ஓய்வில்லை - சம்பந்தன்" class="wp-image-7101" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/12/sampanthan-mp.jpg 600w, https://vmedianews.com/wp-content/uploads/2021/12/sampanthan-mp-300x165.jpg 300w" sizes="(max-width: 600px) 100vw, 600px" /></figure>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/7118">தமிழருக்கு தீர்வு கிடைக்கும்வரை அரசியலுக்கு ஓய்வில்லை &#8211; சம்பந்தன்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/7118/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தொழிற்சங்க இயக்கம் இன, மத அடிப்படையில் பிரிந்து போராடவில்லை &#8211; பிரதமர்</title>
		<link>https://vmedianews.com/archives/6793</link>
					<comments>https://vmedianews.com/archives/6793#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Author]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Dec 2021 03:12:50 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=6793</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/6793" title="தொழிற்சங்க இயக்கம் இன, மத அடிப்படையில் பிரிந்து போராடவில்லை &#8211; பிரதமர்" rel="nofollow"><img width="300" height="133" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award-300x133.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="தொழிற்சங்க இயக்கம் இன, மத அடிப்படையில் பிரிந்து போராடவில்லை - பிரதமர்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award-300x133.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award-1024x453.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award-768x340.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award.jpg 1280w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="தொழிற்சங்க இயக்கம் இன, மத அடிப்படையில் பிரிந்து போராடவில்லை - பிரதமர்" /></a><p>தொழிற்சங்க போராட்டம் என்பது குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து செய்யக்கூடியதொன்றல்ல. அடிவாங்குவதற்கும் நேரிடும், சிறையில் அடைப்படவும் நேரிடும் எனவும், உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிற்சங்கள் தொடர்பிலும், தொழிலார்கள் போராட்டங்கள் பற்றியும்&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/6793">தொழிற்சங்க இயக்கம் இன, மத அடிப்படையில் பிரிந்து போராடவில்லை &#8211; பிரதமர்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/6793" title="தொழிற்சங்க இயக்கம் இன, மத அடிப்படையில் பிரிந்து போராடவில்லை &#8211; பிரதமர்" rel="nofollow"><img width="300" height="133" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award-300x133.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="தொழிற்சங்க இயக்கம் இன, மத அடிப்படையில் பிரிந்து போராடவில்லை - பிரதமர்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award-300x133.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award-1024x453.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award-768x340.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award.jpg 1280w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="தொழிற்சங்க இயக்கம் இன, மத அடிப்படையில் பிரிந்து போராடவில்லை - பிரதமர்" /></a>
<p>தொழிற்சங்க போராட்டம் என்பது குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து செய்யக்கூடியதொன்றல்ல. அடிவாங்குவதற்கும் நேரிடும், சிறையில் அடைப்படவும் நேரிடும் எனவும், உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.</p>



<p>தொழிற்சங்கள் தொடர்பிலும், தொழிலார்கள் போராட்டங்கள் பற்றியும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பல முக்கிய உரையில் தெரிவித்துள்ளார். அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர் என்ற அடிப்படையில் அவரது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p>



<p>முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கத் துறையில் பணியாற்றி, உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய தொழிலாளர் தலைவர்கள் மற்றும் அரச சேவையில் ஈடுபட்டு தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக தமது சேவை காலத்தை அர்ப்பணித்த அரச அதிகாரிகளை கௌரவித்து நிகழ்வில் உரையாற்றும் போது பிரதமர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.</p>



<p>இன்று இங்குள்ள தொழிலாளர் தலைவர்களுக்கு அது குறித்து புதிதாக கூற வேண்டிய அவசியமில்லை. எமது லெஸ்லி தேவேந்திர அவர்களுக்கு இவ்விடயத்தில் 57 வருட அனுபவம் உள்ளது. ஜே.ஆரின் காலத்தில் தொழிலாளர்களுக்காக போராடச் சென்று 12 வருடங்களாக பொய் வழக்குகள் போடப்பட்டு வேலையை இழந்தது எனக்கு நினைவிருக்கிறது. மேலும் அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதேபோன்ற கசப்பான அனுபவங்களை இங்குள்ள பிற தொழிலாளர் தலைவர்களும் கொண்டுள்ளனர். ஆனால் அந்த விடயங்களை கொண்டு தொழிலாளர் தலைவர்களின் வாய்களை யாராலும் அடைக்க முடியாது.</p>



<p>வேலையிழந்து சிறை சென்றாலும் எத்தனை இன்னல்கள் வந்தாலும் சகித்துக் கொண்டு போராடுகிறார்கள். இன்று இங்குள்ள தொழிலாளர் தலைவர்கள் உழைக்கும் மக்களுக்கு தங்களால் இயன்றவரை நேர்மையாக சேவையாற்றியிருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.</p>



<p>கௌரவிப்பு விழாவில், தொழிலாளர் சமூகத்தினருக்காக உன்னத சேவையாற்றிய 09 பிரபல தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இரண்டு அரசாங்க அதிகாரிகள் பிரதமரினால் கௌரவிக்கப்பட்டனர்.</p>



<p>தொழிற்சங்க தலைவர்களான மெரெஞ்ஞகே தயாரத்ன முனிதாச பெர்னாண்டோ (அகில இலங்கை மோட்டார் தொழிற்சங்கம்) லெஸ்லி ஷெல்டன் தேவேந்திர (இலங்கை சுதந்திர சேவை சங்கம்), சுப்பையா சுப்ரமணியம் ராமநாதன் (தோட்டத் தொழிலாளர் சங்கம்), ஹேம அமரதுங்க பியதாச (அகில இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் தொழிலாளர் சங்கம்), ரெங்கசாமி பழனிமுத்து (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்), விஜேவந்த பத்மசிறி அமரசிங்க (இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம்), ரெங்கையா மருதமுத்து கிருஷ்ணசாமி (விவசாய மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம்), ஆறுமுகம் முத்துலிங்கம் (ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம்), துவான் மன்சூர் ரஹீம் ரசிதீன் (இலங்கை தொழிலாளர் சம்மேளனம்) மற்றும் தொழில் அமைச்சின் செயலாளராக சேவையாற்றி தற்போது அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற மஹிந்த மதிஹஹேவ மற்றும் தொழிலாளர் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றி அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற குணசிறி வீரகோன் ஆகியோர் கௌரவ பிரதமரிடம் கௌரவ பாராட்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர்.</p>



<p>நமது நாடு சுதந்திரம் அடைந்து எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதியுடன் 74 ஆண்டுகளாகின்றன. அந்த சுதந்திரத்தை நாம் சாதாரணமாக பெறவில்லை. அந்த சுதந்திரத்தை பெறுவதற்கு தொழிலாளர் இயக்கம் பெரும் தியாகங்களை செய்தது. அவர்களின் அர்ப்பணிப்பு இல்லாவிட்டால், நமது சுதந்திரம் தாமதமாகியிருக்கும்.</p>



<p>அன்று முதல் நமது நாட்டின் தொழிலாளர் தலைவர்கள் இந்நாட்டில் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். அது மாத்திரமன்றி தொழிற்சங்க இயக்கங்களைக் கட்டியெழுப்பி, நாடு எதிர்நோக்கும் சவால்களை ஒவ்வொன்றாக முறியடிப்பதே அவர்களது எதிர்பார்ப்பாக காணப்பட்டது.</p>



<p>ஏ.ஈ.குணசிங்க, கலாநிதி என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி சில்வா, பீட்டர் கெனமன், கலாநிதி எஸ்.ஏ. விக்கிரமசிங்க, பிலிப் குணவர்தன இவ்வாறு பல தொழிலாளர் தலைவர்களை நாம் நினைவு கூருகின்றோம். இவர்கள் தலைமையிலான தொழிற்சங்க இயக்கம் இன, மத அடிப்படையில் பிரிந்து போராடவில்லை. மேலும், உழைக்கும் மக்கள் இனம், மதம், சாதி அடிப்படையில் பிரிக்கப்படவில்லை.<br>அனைவரும் ஒரே வர்க்கத்தினர் என்ற அடிப்படையிலேயே பணியாற்றினர். நமது நாட்டில் தொழிற்சங்க இயக்கம் இன்றும் இவ்வாறு வலுப்பெற்று வருவது அன்று போடப்பட்ட அடித்தளத்தின் காரணமாகவே என்று நான் நம்புகிறேன்.</p>



<p>இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை தங்கள் தொழில்முறை சக ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே செலவிட்டுள்ளனர். அவர்களின் போர்க்குணம் இன்றும் இளமையாக உள்ளது. தொழிலாளர்களின் போராட்டக் களத்தில் இன்றும் முன்னணியில் இருப்பவர்கள் இவர்கள்தான் என்பதைப் பார்க்கிறோம். இன்று உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் பல உரிமைகள் மற்றும் சலுகைகள் இந்த தலைவர்களின் அர்ப்பணிப்பிலிருந்து பெறப்பட்ட உரிமைகள் மற்றும் சலுகைகள் என்று புதிதாக கூற வேண்டியதில்லை.</p>



<p>இந்த தலைவர்களில் பலர் உழைக்கும் மக்களின் வியர்வை மற்றும் கண்ணீருக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருந்தாலும், அவர்கள் தங்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதற்காக நேரத்தையும், உழைப்பையும் மட்டுமின்றி செல்வத்தையும் அர்ப்பணிக்கும் தொழிலாளர் தலைவர்கள் இருக்கிறார்கள். உயிரை பணயம் வைத்து இரவு பகலாக போராடிய இவர்கள் அடையும் ஒரே திருப்தி உழைக்கும் மக்களின் தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுப்பது தான். அதனால் தான், நான் தொழில் அமைச்சராக இருந்தபோது, தங்கள் தொழிற்சங்கங்களுக்காக அரை நூற்றாண்டு காலமாகப் போராடும் தொழிலாளர் தலைவர்களை பாராட்டும் திட்டத்தை வகுத்தேன்.</p>



<p>நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தி உழைக்கும் மக்களே. அவர்களுக்கு ஒரு பாதிப்பின் போது தேவைப்படும்போது நிவாரணம் வழங்க அரசு பணத்தை செலவழிப்பதற்கு 1995 ஆம் ஆண்டு வரை முறையொன்று காணப்படவில்லை. நான் தொழில் அமைச்சராக இருந்தபோது, இந்த தொழிலாளர் தலைவர்களில் பலர் என்னுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். நீண்ட நாட்களாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள். எனவே, இவர்களின் துயரமும் வேதனையும் நமக்கு புரியும். இதன் விளைவாக, அந்த தோழர்களின் நலனை மேம்படுத்தவும், அவர்களை திருப்திகரமான தொழிலாளர் சக்தியாக உருவாக்கவும் &#8216;சிரம வாசனா நிதியத்தை நிறுவ முடிந்தது.</p>



<p>அது மட்டுமின்றி, உழைக்கும் சமுதாயத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தொழிலாளர் தலைவர்களையும், அதிகாரிகளையும் அங்கீகரித்துப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தோம். அப்படித்தான் சிரம வாசனா நிதியத்தை சட்டப்பூர்வ நோக்கமாக்கி, தொழிலாளர் தலைவர்களுக்கு அரச அங்கீகாரத்துடன் இந்த அங்கீகாரம் கிடைக்க வழி வகுத்தது. எனினும், தொழிலாளர்களின் சார்பாக நான் நின்றதால், தொழில் அமைச்சில் இருந்து மீன்பிடி அமைச்சுக்கு மாற நேர்ந்தது. அந்த கடந்த காலம் உங்களுக்கு நினைவிருக்கும்.</p>



<p>ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் இருவருடன் மேலும் தொழிலாளர் தலைவர்கள் பத்து பேர் பாராட்டப்பட்டனர். 2008ஆம் ஆண்டு பலானம்போ, அலெவி மௌலானா , பிட்ரோ, விமல் சிறி டி மெல், காரியவசம், ராமையா, செல்லசாமி ஆகிய தொழிலாளர் தலைவர்கள் 10 பேர் இவ்வாறு பாராட்டப்பட்டனர். ஆனால் இதில் தொழிற்சங்க தலைவிகள் இல்லாமையை நான் குறையாக காண்கிறேன்.</p>



<p>சர்வதேச ரீதியில் கவனத்தில் ஈர்க்கப்பட்ட பொன்சினாஹாமி, எமலியா ஆகிய போராட்ட தொழிற்சங்க தலைவிகள் பற்றியும் எமது நாட்டின் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரதானை சுதுவெல்லவில் வசித்த சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்மணியான பொன்சினா ஹாமிகே போராட்டக்குணம் குறித்து 1923ஆம் ஆண்டு இடம்பெற்ற மாபெரும் வேலைநிறுத்த போராட்டம் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் சர்வதேச ரீதியில் விருது பெற்ற தொழிற்சங்க தலைவியாவார். எமலியா 53 ஹர்தாலின் போது பாரிய பங்காற்றியிருந்தார்.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="453" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award-1024x453.jpg" alt="தொழிற்சங்க இயக்கம் இன, மத அடிப்படையில் பிரிந்து போராடவில்லை - பிரதமர்" class="wp-image-6800" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award-1024x453.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award-300x133.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award-768x340.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2021/12/award.jpg 1280w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/6793">தொழிற்சங்க இயக்கம் இன, மத அடிப்படையில் பிரிந்து போராடவில்லை &#8211; பிரதமர்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/6793/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
