மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திகாந்தனுக்கு இன்று(19.07) இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கிராம வீதிகள் மற்றும் ஏனைய அபிவிருத்திகளுக்கான இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே நேற்று 24 இராஜங்க அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், இன்று மேலதிகமாக இந்த பதவி வழங்கப்படவுள்ளது.
இலங்கையின் தற்போதைய நாட்டின் நிலையினை சீர் செய்ய 19 அமைச்சர்களும் 25 இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.