மின்தேவை முகாமைத்துவம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 331,000 மாணவர்களின் உரிமைகள் மின்வெட்டு மூலம் மீறப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையின் போது மின்தேவை முகாமைத்துவ வேலைத்திட்டத்தை தொடரவுள்ளதாக இலங்கை மின்சார சபை நேற்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தது.