மீன்பிடி படகுகளுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகியுள்ளது.
பேருவளை துறைமுக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் சீனக் குடியரசின் உதவியின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த இரண்டாம் கட்ட மண்ணெண்ணெய் விநியோகம் நேற்று (12.10) கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தலைமையில் இடம்பெற்றதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் சுமார் 28,000 மீனவர்கள் இந்த எரிபொருள் கொடுப்பனவை பெற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட நாற்பத்திரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் லீற்றர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளதுடன், ஒரு மீனவர் 153 லீற்றர் மண்ணெண்ணையை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.