முழுமையாக வற்றிப் போயிருந்த நாட்டின் வெளிநாட்டு கையிருப்பினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் 3.6 டொலர் பில்லியன்களாக உயர்த்த முடிந்ததென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
“மக்கள் எப்போதும் பிரச்சிதமான தீர்மானங்களை விரும்புகிறார்கள். அதனால் அரசியல்வாதிகளிடமிருந்து பிரச்சிதமான தீர்மானங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் பிரபலமான தீர்மானங்கைளை நோக்கிச் செல்லும் போது, நாம் அவற்றில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களுக்கு கூறினோம். ஆனால் மக்கள் பிரபலமான தீர்மானங்களையே எடுத்தார்கள். ஒவ்வொரு முறையும் பிரபலமான முடிவுகள் எடுக்கப்பட்டபோது ஒரு நாடாக நாம் தோல்வியடைந்துள்ளோம்.
இப்போது எங்கள் மீது குற்றம் சாட்டும் சிலருக்கு நாங்கள் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தமை நினைவில் இல்லை. அவர்கள் அரசாங்கத்தில் இருந்தார்கள். எதிர்க்கட்சியில் இருந்து வந்தே இதனைச் செய்தோம்.
ஒரு டொலர் கூட இல்லாத நிலையிலேயே நாம் இந்த நாட்டை பொறுப்பேற்றோம். மத்திய வங்கியின் டொலர் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் எமது புலம்பெயர் தொழிலாளர்களின் கைகளில் இருந்தன. அவ்வாறு இருந்த மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு இன்று 3.6 பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டால், இந்நாட்டில் டொலர்கள் இல்லாமல், எதையும் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வருகின்ற காலத்தில் அப்போது, நினைத்தவாறு பணம்அச்சிடப்பட்டது. அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்தது.
இப்போது வட்டி விகிதம் 9 சதவீதமாகும். வங்கியில் கடன் பெறக் கூடிய நிலைக்கு நாட்டை கொண்டுவந்தோம்.
இப்போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். அனால் அதனையும் “மீடியா ஷோ” என்று கூறுகின்றார்கள். இது இந்நாட்டில் உண்மையாக நடக்க கூடாதா? வீதிகளில் ஒழுக்கம் ஏற்படுத்தப்படுகிறது. கல்விக்கான திட்டம் உருவாக்கப்படுகிறது. உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாடு டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. வெளிநாடுகள் ஈர்க்கப்பட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார்.