நீர் கட்டணம் செலுத்தாத ஆயிரக்கணக்கானோரின் நீர் விநியோகம் துண்டிப்பு!

கடந்த வருடத்தில் 80,000க்கும் அதிகமான பாவனையாளர்கள் நீர் விநியோகம் கட்டணம் செலுத்தாமையால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, 30 இலட்சம் நீர் பாவனையாளர்களில் 80,970 பேருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எண்ணிக்கையில் 63,150 உள்நாட்டு வாடிக்கையாளர்களும் 17,820 உள்நாட்டில் அல்லாத வாடிக்கையாளர்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவற்றுள் வைத்தியசாலைகள், பாடசாலைகள், ராணுவம் மற்றும் பொலிஸ் நிலையங்களும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நீர் இணைப்புகளை துண்டித்துள்ள வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையில் 25 வீதத்தை செலுத்தி மீண்டும் இணைப்பை பெற்று எதிர்கால கொடுப்பனவுகளை தொடர முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply