கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடுருவப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடையாளம் தெரியாத “Anonymous EEE” என்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இந்த செயலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவனே தன்னை மேற்கோள்காட்டி, அமைச்சின் இணையத்தளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதாக
சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இணையதளத்தை ஊடுருவியமைக்கு அந்த மாணவன் மன்னிப்பு கோரியதுடன் கல்வி அமைச்சின்
உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை சரிபார்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இலங்கைப் பிரஜை என்ற வகையில் நாட்டின் பாதுகாப்பிற்காக இதனை அறியப்படுத்துகிறேன்” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.