முதல் IPL போட்டியில் களம் காணும் வியாஸ்காந்த்

இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இன்று(08.05) தனது முதலாவது ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக விலகியிருந்த நிலையில், அவரின் இடத்திற்கு வியாஸ்காந்த் இணைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய(08.05) போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் விஜயகாந்த் வியாஸ்காந்த் களமிறங்கினார். 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, வியாஸ்காந்த் இன்னும் சில நிமிடங்களில் தனது முதலாவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பந்து வீசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply