இந்திய மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(18.06) ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார். 

நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை மீனவர்கள் நால்வரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் – கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களே ஒரு படகுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply