வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்

வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்

2024 ஜனாதிபதித் தேர்தலின் தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.

வாக்களிப்பு காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 04 மணியுடன் நிறைவடைந்து.

தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தபால் மூலமான வாக்குகளாகவோ அல்லது பதிவான வாக்குகளின் மூலமாகவோ முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது வாக்கு எண்ணும் மையங்களிலுள்ள அதிகாரிகளின் திறமையைப் பொறுத்தே அமையும் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இன்று நள்ளிரவில் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

Social Share

Leave a Reply