எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஆரம்பம்

காலி, எல்பிட்டிய பிரதேச சபைக்கு 29 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.

இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுவோன்றும் போட்டியிடுகின்றன.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்களிக்க 55,643 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதுடன், 48 வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் நடைபெற்று வருகின்றது.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ.எல்.ரத்நாயக்க நேற்று(25.10) தெரிவித்திருந்தார்.

Social Share

Leave a Reply