ரயில் முன் பாய்ந்து மாணவி மரணம்

12 தரம் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ரயிலில் பாய்ந்து தனது உயிரை மாய்த்துளார். கொழும்பு தெமட்டகொட ரயில் நிலையத்துக்கு அண்மையில் இந்த சம்பவம் நேற்று(26.10) நடைபெற்றுள்ளது. பேருவளை பகுதியை வசிப்பிடமாக கொண்ட மாணவி கொழும்பு 07 இல் அமைந்துள்ளன பிரபல அரச மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற மாணவி ஆவார்.

பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்ச்சி ஒன்றுக்காக மருதானை பகுதிக்கு சென்றுவிட்ட பின்னர் தெமட்டகொட பகுதிக்கு சென்று கொழும்பு நோக்கி பயணித்த நானு ஓயா கடுகதி புகையிரத்தில் பாய்ந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் அவரது உயிரிழந்துள்ளார்.

Social Share

Leave a Reply