தமிழர் விடுதலை கூட்டணியை ஊடகங்கள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் பரப்புரைகள் மற்றும் ஊடக சந்திப்புகள், மற்றும் செய்திகளை ஊடகங்கள் பிரசுரிக்க மற்றும் வெளிப்படுத்த மறுப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் கணேசனாதன் சபேசன் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக வவுனியாவில் பலம் பொருந்திய அரசியல் கட்சிகளிடம் பணம் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொண்டுள்ள சில ஊடகவியாளர்கள் அவர்களுக்கான ஆதரவு செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவதாக மேலும் கூறியுள்ளார். அத்தோடு தேர்தலில் போட்டியிடும் பணம் படைத்தவர்கள் வழங்கும் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளுக்காக அவர்களது செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஊடகங்கள் சமநிலையான செயற்படவேண்டும். சகல தரப்பின் செய்திகளையும் வழங்க வேண்டும். அண்மையில் ஊடக சந்திப்பை நடாத்தியிருந்தோம். ஆனாலும் அந்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடவில்லை. பல ஊடகவியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட போதும் அனைவரும் வருகை தரவில்லை. இவ்வாறான செயற்பாடுகளை ஊடகவியாளர்கள் தவிர்த்து, சமநிலையாக, அனைத்து கட்சிகளுக்கும் இடம் வழங்கி செய்திகளை வெளியிடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply