போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நபரிடமிருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயதுடைய கொத்தடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை அழைத்துச் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த ஆண் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்த கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Social Share

Leave a Reply