தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் இருப்பதாகவும், அதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது,
சமூக ஊடகங்களில் என்னை இலக்கு வைத்து, என்னைப் பற்றி தீங்கிழைக்கும் மற்றும் முற்றிலும் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது தொடர்பாக,
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளேன்.
இவ்வாறான செயற்பாடுகளால் பெண்களை அரசியலில் இருந்து அகற்ற முயற்சிக்கிறார்கள் எனின், இன்னும் கடினமாக முயற்சி செய்யுங்கள் என நாங்கள் அவர்களுக்குச் சொல்கிறோம்.
கூட்டு இயக்கத்தால் பிறந்த அரசை இப்படிப்பட்ட தோல்வியுற்ற தந்திரங்களால் கவிழ்க்க நினைத்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார்.