புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் ஆரம்பமானது.

2024 ஆம் ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று காலை 10.30 முதல் மாலை 5.30 வரை இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வாரத்திற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் நடைபெறவுள்ளதுடன், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ஒழுங்குகள் உள்ளிட்ட பல சட்டமூலங்கள் மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை சபை அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் துறைசார் அமைச்சரால் முன்வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply