அஸ்வெசும கொடுப்பனவை இன்றை தினம் பெற்றுக்கொள்ளலாம்

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 12 பில்லியனுக்கும் அதிகமான தொகை பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,732,263 குடும்பங்களுக்கு 12,597,695,000 ரூபா உதவித்தொகை இன்றைய தினத்திற்குள் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து பயனாளர்களும் தமது வங்கிக் கணக்குகளிலிருந்து இன்றைய தினம் உதவித்தொகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Social Share

Leave a Reply