பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன.
இதுவரையிலும் இடம்பெற்ற தாக்குதல்களில் இது மிக மோசமான தாக்குதல் என்று ஈராக்கின் பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு சுமார் ஆறு மணி நேரத்திற்கு முன்பு, ஈராக்கில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது.