மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
கேப் வாகனத்தின் சேசி எண்ணை மாற்றி, போலி பதிவு செய்ய உதவி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு துறை அவரை கைது செய்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைப் பிரிவு மேற்கொண்ட விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர் இன்று (28.03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.