எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அவர்கள் தமது பதவியிலிருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விலகியுள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2026 ஏப்ரல் 17ம் திகதியிட்ட தனது பதவி விலகல் கடிதத்தில், நிலக்கரி கொள்முதல் தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகள் மற்றும் 2009 முதல் இடம்பெற்ற இறக்குமதிகளை ஆய்வு செய்ய ஜனாதிபதி விசாரணைக் குழுவை நியமித்ததும், குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) இணைக்கப்பட்டதும் ஆகிய சூழ்நிலைகளை முன்னிட்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.