தித்வா புயலின் மீட்புப் பணிகளுக்கு பிலிப்பைன்ஸ் நிதியுதவி!

தித்வா புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் புனரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திடமிருந்து இலங்கை 100,000 டாலர் நன்கொடையைப் பெற்றுள்ளது.

இந்த நிதியை, பிலிப்பைன்ஸ் தூதர் நினா பி. கைங்லெட், வெளியுறவு அமைச்சர் விஜய்த ஹெரத்திடம் வழங்கினார்.

மீட்புப் பணிகளின்போது வழங்கிய ஆதரவிற்கும் ஒற்றுமைக்கும் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அமைச்சர் விஜய்த ஹெரத் தனது ட்விட்டர் பக்கத்தில் (X) நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply