கடவத்த பேருந்து நிலையத்தில் நேற்று (12.05) நடத்தப்பட்ட ஒரு சிறப்பு போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தின் போது, ஏழு பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் பாதுகாப்பையும், வீதி ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 148 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
இலங்கை காவல்துறை மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நாடு தழுவிய திட்டம், போதைப்பொருள் இல்லாத பொதுப் போக்குவரத்து சேவையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.