எபோலா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக, மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு தற்காலிக பயணத் தடை விதிக்க கனேடிய அரசு தீர்மானித்துள்ளது.
அதன்படி, கோங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் குடிமக்கள் எதிர்வரும் 90 நாட்களுக்கு கனடாவிற்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.
எபோலா வைரஸ் கனடாவிற்குள் நுழைந்து, நாட்டிற்குள் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.