Jaffna Kings அணி கிண்ணத்தை வெல்லும் என தெரிவிப்பு

Jaffna Kings அணி லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை வெல்லுமென அதன் பணிப்பாளர் வாகீசன் வி மீடியாவுக்கு தெரிவித்தார். இன்று(26.07) கொழும்பு மூர்ஸ் விளையாட்டுக்கு கழக மைதானத்தில் ஜப்னா கிங்ஸ் அணிக்கும் கோல் க்ளாடியேட்டர்ஸ் அணிக்குமிடையிலான பயிற்சி போட்டி நடைபெற்றது.

தமது அணி சிறப்பான தயார்படுத்தல்களை செய்துள்ளதாகவும், இம்முறை ஏலம் மூலம் வீரர்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில் தாம் எதிர்பார்த்த 75% வீரர்களை ஏலம் மூலம் பெற்றுள்ளதாகவும் பலமான அணியாக தமது அணி இருப்பதாகவும் அவார் மேலும் எமக்கு தெரிவித்தார்.

சொஹைப் மலிக் ஆரம்ப போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார் எனவும், அதன் காரணமாக பங்களாதேஷ் அணியின் அண்மைய பிரபல துடுப்பாட்ட வீரர் தௌஹித் ரிதோய் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

கடந்த முறை சிறந்த வளர்முக வீரருக்கான விருதை வென்ற விஜாஸ்காந்த் இம்முறையும் சிறப்பாக விளையாடுவர் என நம்பிக்கை வெளியிட்ட அவர், அணியில் சிறந்த வீரர்கள் காணப்படுவதாகவும் அதன் காரணமாக தாம் நல்ல முறையில் விளையாடுவோம் எனவும் சுட்டிக் காட்டினார்.

அணியின் பயிற்றுவிப்பாளர் திலின கண்டாம்பி சிறந்த பயிற்றுவிப்பாளர் எனவும், தமது அணியின் முகாமைத்துவ அணி சிறப்பானது எனவும் அதன் காரணமாக அதில் மாற்றங்கள் செய்யவில்லை எனவும், தொடர்ந்தும் திலின கண்டாம்பியன் பயிற்றுவிப்பில் யாழ் அணி சிறப்பாக விளையாடுமெனவும் வாகீசனை வி மீடியா பணிப்பாளர் சந்தித்து நேர்காணலை பதிவு செய்த வேளையில் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply