மலையக தமிழ் மக்களது அபிலாஷைகள் உள்ளடங்கிய அரசியல் ஆவண தயாரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. இன்று இந்த ஆவணம் தொடர்பிலான கலந்துரையாடல் கொழும்பு மன்டரீனா ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது.
“இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாகும், மலையக தமிழ் மக்களது, அபிலாஷைகள் மற்றும் இலங்கை-இந்திய ஒப்பந்தங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து மலையக தமிழ் மக்களது அரசியல் ஆவணம் இறுதி வடிவம் பெற்றுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாரளுமன்ற உறுப்பினர்கள், எம்பிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரது பங்குபற்றலுடன் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
தயாராகியுள்ள ஆவணம் இலங்கை அரசு, இந்திய அரசு, தமிழக அரசு, பிரித்தானிய அரசு ஆகியவற்றுக்கு சமர்பிக்கப்படும் அதேவேளை இலங்கையின் அரசியல் கட்சிகளுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகளுக்கும் மேலதிக கலந்துரையாடலுக்காக வழங்கப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
