வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வவுனியா நகர பகுதியில் அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா, மன்னர் வீதி காமினி மகா வித்தியாலய பகுதியில் ஆரம்பித்த போராட்டம், பேரணியாக வவுனியா நகர வீதிகளினூடாக சென்று வவுனியா நகர மத்தி மணிக்கூட்டு கோபுர பகுதி மற்றும் பழைய பஸ் நிலைய பகுதிகளில் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனார்.
உலகின் மாபெரும் சக்தியான மாணவ சகதியின் அழுத்தம் மூலமாக தற்போதைய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடியான சூழலை நிறைவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும், அரசாங்கத்தை வெளிநடப்பு செய்ய கோரியும் போராட்டத்தில் ஈடுபாடுவதாக வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.