நாட்டில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயற்படவேண்டிய காலமிது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சமூக, சமய, பொருளாதர நாசகார வேலைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாமெனவும், நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இந்த காலகட்டத்தில் முக்கியமானது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
