கட்சிக்குள் கை வைத்தல் ஆதரவு வாபஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி செயற்பாடுகளுக்கு பின்னடைவு ஏற்படும் விதமாகவோ, அதன் உறுப்பினர்களை அரசாங்க பக்கமாக இழுக்கும் செயற்பாடுகளுக்கு முயற்சி செய்தாலோ அரசுக்கு வழங்கும் ஆதரவை உடனடியாக நீக்கி கொள்வதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

தற்போது நாடு எதிர் நோக்கியுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டைக் மீட்டெடுப்பது மிகவும் அத்தியாவசியமானது என பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி நம்புகிறது.

அதன்பிரகாரம், தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளும் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கத்தில் பதவிகள் எதுனையும் பெறாமல்,பாராளுமன்ற செயல்முறையின் கீழ் பூரண ஆதரவை வழங்க இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஏகமானதாக முடிவு எடுக்கப்பட்டதக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் சாதகமாக்கிக் கொள்ள மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிப்படைக் கொள்கைகளுக்குப் புறம்பாக, எம்.பி.க்களை ஆளும் கட்சியின் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் செயற்ப்பாடுகள் எடுக்கப்பட்டால் குறித்த ஆதரவை நிபந்தனையின்றி இடைநிறுத்துவதாகவும் நாடளுமன்றக் குழு முடிவு செய்தது என ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கட்சிக்குள் கை வைத்தல் ஆதரவு வாபஸ்

Social Share

Leave a Reply