யாழில் வீட்டினுள் புகுந்து பெற்றோல் திருட்டு

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் வீடொன்றினுள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை இனம் தெரியாத நபர்கள் இருவர் திருடிய சம்பவம் கண்காணிப்பு வீடியோ கமராவில் பதிவாகியுள்ளது.

வீட்டினுள் அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்த இருவர் ,நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

காலையில் மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, இயங்காத நிலையிலையே பெட்ரோல் திருடப்பட்டமை தெரியவந்துள்ளத போது பாதுகாப்பு கண்காணிப்பு கமராவில் பரிசோதித்து வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை திருடிக்கொண்டு சென்றதை உறுதி செய்ய முடிந்துள்ளது.

இந்நிலையில் தனது வீட்டினுள் புகுந்து பெட்ரோல் திருட்டில் ஈடுபடும் வீடியோ காட்சியினை சமூக வலைத்தளங்களில் வீட்டின் உரிமையாளர் பகிர்ந்துள்ளார்.

யாழில் வீட்டினுள் புகுந்து பெற்றோல் திருட்டு

Social Share

Leave a Reply