நாட்டில் ஏட்பட்டுள்ள பணவீக்கத்தின் காரணமாக அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குறைந்த சம்பளம் ஈட்டுவோர் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அது தொடர்பாக தொழில் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார சம்பள உயர்வுக்கான யோசனை ஒன்றினை அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.
இப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தொகையான 12500 ரூபாவை 17500 ரூபாவாகவும், நாளாந்த சம்பளத்தை 500 ரூபாயில் இருந்து 700 ரூபாவாக உயர்த்த அவர் அமைச்சரவையில் பரிந்துரை செய்துள்ளார்.
