மந்த போசணைமிக்க எதிர்கால சமூகத்திற்கான அபாயம்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த இடைக்கால பாதீட்டில் உணவு பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் எதுவும் இல்லையென நாடாளுமன்ற  உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் தாய்மாரின் போசணை தொடர்பான ஒத்திவைப்பு வேளையில் பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இது தொடர்பில் தெரிவித்தார்.

தொடர்ந்தும், 5 வயதுக்கு குறைந்த சிறுவர்களின் மந்த போசணை நிலைமை தொடர்பான உலக தரப்படுத்தல் வரிசையில் இலங்கை 6வது இடத்திலும் தெற்காசிய தரப்படுத்தல் வரிசையில் 2ஆவது இடத்திலும்  உள்ளதாக அண்மையில் யுனிசெப் தெரிவித்திருந்தது.

அதற்கமைய இது தொடர்பில் அரசாங்கம் உரிய வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் எனவும் சிறுவர்களில் 5 வயதுக்கு குறைந்தவர்களே அதிகளவில் மந்த போசணை நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு இலங்கை சனத்தொகையில் 49 லட்சம் பேர் தமக்கான உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என்பதனையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

மேலும், ஐந்து பேரை கொண்ட ஒரு குடும்பத்துக்கு 2019 இல் ஒரு நேர பகலுணவுக்கான செலவு 1100 ரூபாவாக இருந்த அதே வேளை 2022 இல் அது 2300 ரூபாவை விடவும் அதிகரித்துள்ளது என்பதையும் தெரிவித்திருந்தார்.

இது போன்ற அடிப்படை காரணங்களோடு கர்ப்பிணி தாய்மார்களுக்கான திரிபோஷா நாட்டில் தட்டுப்பாடாக உள்ளதோடு தற்போது கோதுமை மாவின் விலையானது அதிகரித்துள்ள காரணத்தினால் பெருந்தோட்ட மக்களும் நிர்கதியாகியுள்ள நிலையில் , உணவை பாதுகாத்து அதனை பகிர்தளிப்பதற்கான சிறந்த முறையொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply