திலினி பிரியமாலிக்கு பிணை!

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியை கடுமையான பிணை நிபந்தனைகளுடன் இன்று (16.12) விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கோட்டை நீதவான் திலின கமகே, திலினிக்கு பிணை வழங்கியுள்ளார்.

ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான உத்தரவாததாரர்களின் வசிப்பிடச் ஆவணங்கள் மற்றும் சொத்துச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வெளிநாடு செல்வதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் திலினி பிரியமாலிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மதிப்பிழந்த காசோலைகள் தொடர்பான பணத்தையும் மீள் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டார்.

திலினி பிரியமாலி தொடர்பில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் 8 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டிருந்ததுடன், அந்த வழக்குகளிலிருந்து, முன்னரே அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply