நத்தார் வழிபாடுகளை நடத்தும் ஆலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் தேவாலயங்களுக்கு பொறுப்பான அருட்தந்தையர்கள் மற்றும் துறவிகளுடன் கலந்துரையாடுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் இந்த நத்தார் காலத்தில் ஆலயங்களுக்குள் சந்தேகத்துக்கிடமாக நடந்துகொள்வோர் தொடர்பில் அவதானமாக செயற்பட குழுக்களை அமைத்து தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில், சிறப்பு வழிபாடுகள் முன்னெடுக்கப்படும் மிக முக்கியமான தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க வெளி மாகாணங்களிலுள்ள பொலிஸ் பிரிவினர் வரவழைக்கப்படவுள்ளனர்.