துறைமுக நகரதிற்கு புதிதாக வணிக நீதிமன்றம் ஒன்றை நிறுவது தொடர்பில் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதாரக் கழக சட்டத் துறையின் குழுக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆலோசனை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடப்படவுள்ளது.
இவ்வாறானதொரு நீதிமன்றத்தை திருவுவதால் துறைமுக நகர வணிக வளாகத்தில் இடம்பெறும் வணிக நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்குகளை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ள இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவாதங்களில் நீதி அமைச்சு மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் ஈடுபடுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.