மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடியில் உள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்திலிருந்து கண்ணீர் வடியும் அதிசயத்தினை காண்பதற்காக பெருமளவானோர் குவிந்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி சந்தியில் உள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்தில் நேற்று (20.01) மாலையிலிருந்து கண்ணீலிருந்து தண்ணீர்போன்ற திரவம் வடிந்துவருகின்றது.
இது தொடர்பான தகவல் பரவியதை தொடர்ந்து மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான மக்கள் திருச்சொருபம் உள்ள இடத்திற்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

