பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (21.06) முன்னிலையாகியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக விதிகளை மீறி போராட்டம் செய்தாக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விமல் வீரவன்ச முன்னிலையாக தவறியிருந்த நிலையில், கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன டி அல்விஸ், அவரைக் கைது செய்யுமாறு ஜூன் 19 அன்று பிடியாணை பிறப்பித்தார்.
இந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.