இலங்கையில் மருந்துகளின் தரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தில் உள்ள குறைபாடுகளே பிரதான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்துவதற்கான வரைவு ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.