பாடசாலை வரவு மிக மந்தம்

நேற்று இலங்கை முழுவதும் 200 இற்கு உட்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலைகள் ஆரம்பித்தன. இருப்பினும் பிள்ளைகளும், ஆசிரியர்களும் வருகை தந்தது மிகவும் குறைவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16% மாணவர்களும், 26% ஆசிரியர்களும் வருகை தந்ததாக தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே அதிகமானவர்கள் வருகை தந்ததாக சுட்டி காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் 39% மாணவர்களும், 46% ஆசிரியர்களும் வருகை தந்ததாக தெரிவித்த அவர், மேல்மாகாணத்தில் 7% ஆசிரியர்கள், மாணவர்களே பாடசாலைகளுக்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஏனைய மாகாணங்களில்,15% மாணவர்களும், 18% ஆசிரியர்களும் வருகை தந்ததாக அவர் கூறியுள்ளார்.

அதிபர் ஆசிரியர்களின் போராட்டம், விடுமுறைகளின் பின்னரான வியாழக்கிழமை பாடசாலை ஆரம்பம் போன்ற காரணங்களினால் மாணவர்கள் வரவு குறைவாக காணப்பட வாய்ப்புகளுள்ளன. திங்கட்கிழமை சரியான வரவினை எதிர்பார்க்கலாம் என நம்பப்படுகிறது.

பாடசாலை வரவு மிக மந்தம்

Social Share

Leave a Reply