அடுத்த வருடம் ஜனவரி 1ம் திகதி முதல் சாரதிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இந்த ஓட்டுநர் குறைமதிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.