சர்வகட்சி மாநாடு சற்று முன்னர் ஆரம்பம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வக்கட்சி மாநாடு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இம்மாநாட்டில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் ஏனைய முக்கிய கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் 13ஆவது திருத்தச்சட்டம் முக்கிய பேசுபொருளாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தமிழ் தரப்பு அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply