வவுனியா வாள்வெட்டு சம்பவம் – கொழும்பு பொலிசார் விசேட சோதனை!

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டினை கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிசாரின் இராசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனை செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட குழு வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டதுடன், வீட்டிற்கும் பெற்றோல் ஊற்றி தீ வைத்தனர்.

இச்சம்பவத்தில் 21 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரில் குறித்த பெண்ணின் கணவரான 32 வயது இளம் குடும்பஸ்தர் இன்று (26.07) அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், வீடு எரியூட்டப்பட்டமை மற்றும் அங்கு எரிந்த பொருட்கள் தொடர்பில் இராசாயன பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு கொழும்பில் இருந்து விசேட பொலிசார் வருகை தந்து சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு இரசாயன பகுப்பாய்வு செய்துள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு தரப்புக்களிடமும் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

Social Share

Leave a Reply