அவுஸ்திரேலியாவில் இறந்து கரையொதுங்கிய திமிங்கிலங்கள்!

அவுஸ்திரேலியாவில் இறந்து கரையொதுங்கிய திமிங்கிலங்கள்!

அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் 50 க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரையொதுங்கியுள்ள திமிங்கிலங்களில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் திமிங்கிலங்களை மீண்டும் கடலுக்கு அனுப்பும் செயற்பாடுகளும், மீட்பு பணிகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க கடல்சார் நிபுணர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முகாமிட்டு பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகளவிலான திமிங்கலங்கள் உயிரிழந்து கரையொதுங்குவது ஏதேனும் ஆபத்தின் அறிகுறியா என்பது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply