நடுக்கடலில் பற்றி எரிந்த சரக்கு கப்பல்!

நெதர்லாந்தின் வடக்கு கடற்பரப்பில் சுமார் மூவாயிரம் கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் ஒன்று நேற்று (26.07) தீபிடித்து எரிந்துள்ளது.

இந்த தீ விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், கப்பலில் இருந்த 16 ஊழியர்களும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மனியின் துறைமுகமான ப்ரெமனில் இருந்து எகிப்தில் உள்ள போர்ட் சைட் துறைமுகத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த சரக்கு கப்பலே தீவிபத்திற்கு உள்ளாகியுள்ளது.

அத்துடன் குறித்த கப்பலில் முவ்வாயிரம் கார்கள் ஏற்றிச் சென்ற நிலையில், அந்த கார்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அது அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக நெதர்லாந்தின் கடலோர பொலிஸ் செய்தித் தொடர்பாளர் லியா வெர்ஸ்டீக் தெரிவித்துள்ளார்.

இந்த சரக்கு கப்பலில் 2857 கார்களும், 25 மின்சார கார்களும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply