மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (05.08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படும் எனவும்,
இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய சந்தர்ப்பங்களில் ஏற்படும் ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரையை அண்மித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும், ஏனைய கடற்பரப்புகள் சற்று கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.