மலையகம் ஊடான ரயில் சேவைகளில் பாதிப்பு!

மலையகம் ஊடான ரயில் சேவைகள் இன்று (16.08) தாமதமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பலன மற்றும் இஹலகொட்டை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் மரம் முறிந்து விழுந்த காரணத்தில் ரயில் சேவைகள் தாமதமடையும் என ரயில்வே பொது முகாமையாளர் எம்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.  

இதன்காரணமாக கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கவுள்ள நான்கு ரயில்கள் மற்றும் கொழும்பிலிருந்து பொல்கஹவெல பகுதிக்கு செல்லும் இரண்டு ரயில்கள் தாமதமடையும் என அவர் கூறியுள்ளார். 

குறித்த மரங்களை அகற்றி ரயில் சேவையை வழமைக்கு கொண்டுவர குறித்த பகுதிக்கு குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply