தென்னிந்திய பிரபல பாடகர் காந்தக்குரலோன் ஹரிஹரன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளார்.
இன்று (19.08) மாலை 6.30 மணிக்கு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள நேரடி இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவே இவர் இலங்கை வந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கனடா என பல மொழிகளில் 15,000 இருக்கும் அதிகமான பாடல்களை பாடி தனெக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டுள்ள ஹரிஹரன், இதற்கு முன்னரம் பல இசை நிகழ்ச்சிகளுக்காக இலங்கை வந்துள்ளார்.
இவருடன் இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மா.க.ப ஆனந்த், பாடகி சிவாங்கி ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.
