மின்சார சபை மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

ஹம்பாந்தோட்டை – பொல்பிட்டிய உயர் அழுத்த பாதைக்கு அண்மித்த பகுதிகளில் பட்டம் பறக்கவிட வேண்டாம் என இலங்கை மின்சார சபை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மின்சார சபை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில், குறித்த பகுதியில் 220 கிலோவோல்ட் உயர் மின்னழுத்த மின் கடத்தல் பாதையின் இறுதிக்கட்ட நிர்மாணப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், அவ்வாறு செய்ய வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply