இலங்கை மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் நடைபெற்ற 20-20 போட்டியில் இன்று(02.09) இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிராக இலங்கை மகளிர் அணி பெறும் முதலாவது வெற்றி இதுவாகும்.
சாமரி அத்தப்பத்துவின் அபாரமான அதிரடி துடுப்பாட்டம், பந்துவீச்சு என்பன இந்த வெற்றிக்கு கைகொடுத்துள்ளது. முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 104 ஓட்டங்களை பெற்றது. இதில் சார்லி டீன் 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில் உதேசிக்கா பிரபோதனி, இனோசி பிரியதர்சினி, இனோகா ரனவீர, கவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள். சாம்ரி அத்தப்பத்து ஆரம்ப பந்துவீச்சாளராக பந்துவீசி ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.சுகந்திகா குமாரி ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.
பதிலகுக்கு துடுப்பாடிய இலங்கை அணி முதல் விக்கெட்டை வேகமாக இழந்த போதும் சாமரி, ஹர்சிதா ஆகியோர் 69 இணைப்பாட்டமாக பெற்றுக் கொடுக்க வெற்றி இலகுவானது. சாமரி 55 ஓட்டங்களையும், ஹர்சிதா ஆட்டமிழக்காமால் 30 ஓட்டங்களையும் பெற்றனர். 13.2 ஓவர்களில் 02 விக்கெட்டினை இழந்து 110 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளடங்கிய 1-1 என சமநிலை அடைந்துள்ளது.