இன்றைய வானிலை!

நாட்டின் பலப்பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10.09) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவில் ஓரளவு மழை பெய்யும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றானது மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலான இடங்களில் மழையுடன் கூடிய காலநிலையே நீடிக்கும் என்பதால்  இடி மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply