மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்று (13.09) பயணித்த மேனகயா இரவு தபால் ரயிலில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளதது.
வெலிகந்த மற்றும் பூனானி புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகாமையில் மூன்று நாட்களுக்கு முன் இரவு 9.15 மணியளவில் புளதிசி ரயிலில் மோதி மற்றொரு யானை உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.